follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2ஆட்சி அதிகாரத்தை ஜே.வி.பிக்கு வழங்க மக்கள் முட்டாள்கள் அல்ல

ஆட்சி அதிகாரத்தை ஜே.வி.பிக்கு வழங்க மக்கள் முட்டாள்கள் அல்ல

Published on

தேசிய மக்கள் சக்திக்கு பேஸ்புக் அலை மட்டுமே உள்ளது என்றும் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ஜே.வி.பிக்கு வழங்கும் அளவுக்கு இந்த நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை எனவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் போது அதனை ஒரேயடியாக செய்ய முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (15) மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி முறைமை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு ”இன்று ஜனாதிபதி முறைமை பற்றி ஒரு கருத்து உள்ளது. ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதன் மூலம் அதனை திடீரென மாற்ற முடியாது. அப்படியானால், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறை, நிர்வாக அதிகாரம் எவ்வாறு பரவலாக்கப்படுகிறது, அரசியலமைப்பு ரீதியாக அந்த விவகாரங்கள் மாற்றப்பட வேண்டும். தினமும் சிறு சிறு திருத்தங்களால் ஏற்படும் நம் நாட்டில் நடந்த பிரச்சினை இது. போராட்டத்தின் போது மக்கள் அமைப்பு மாற்றத்தை ஏன் கோரினார்கள்? அமைப்பு மாற்றம் என்பது அரசியல்வாதிகளின் தவறுகள் மட்டுமல்ல. இதைத்தான் திரு.ரணில் விக்கிரமசிங்க இன்று செய்கிறார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கும், முறைமையை மாற்றக்கூடிய ஒரு தலைவராக நான் திரு ரணில் விக்கிரமசிங்கவை மட்டுமே பார்க்கிறேன் என்று கூறுகிறேன்.” என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...