follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2Black List தொடர்பான தரவுத்தளம் எமது நாட்டில் இல்லை

Black List தொடர்பான தரவுத்தளம் எமது நாட்டில் இல்லை

Published on

டெண்டர் முறை மற்றும் கொள்முதல் முறைக்கு மாறாக ஊழல் மற்றும் மோசடியான, இலஞ்சம் வழங்கி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. உலகின் பிற நாடுகளில் உள்ள இதுபோன்ற நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை இனங்கண்டு நாட்டு மக்களுக்கு பொதுவான வழிமுறைகள் மூலம் தெரியப்படுத்துகின்றனர். நேபாளத்தில் 629 நிறுவனங்களும் பங்களாதேஷில் 510 நிறுவனங்களும் இவ்வாறு இனம்காணப்பட்டு கருப்பு பட்டியல் படுத்தப்பட்டு வெளிக்கொணர்ப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டெண்டர் மோசடிகள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட, இந்நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்காத தெற்காசியாவின் ஒரே நாடு இலங்கை மட்டுமே. இவ்வாறான கருப்புப் பட்டியல்கள் தொடர்பான தரவுத்தளம் எமது நாட்டில் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த முறை மாற்றப்படும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் திருட்டு, மோசடி காரணமாக கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் ஒவ்வொரு நிறுனங்கள் தொடர்பான தகவல்களும் பொதுத் தரவுத்தளம் மூலம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இத்தகைய கருப்புப்பட்டியலில் உள்ள நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டால், வரி செலுத்தும் மக்களுக்கு அது குறித்து அறிய உரிமை உண்டு. இந்த உரிமையை மக்களுக்கு பெற்றுத் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 105 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கெபிதிகொல்லேவ, முஸ்லிம் அட்டவீரவெவ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்றைய (19) தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...