follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்இஸ்ரேல் பிரதமரை பதவி விலகக்கோரி இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் பிரதமரை பதவி விலகக்கோரி இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்

Published on

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காஸா பகுதியில் போர் மோதல்கள் தொடங்கியதை அடுத்து இஸ்ரேல் அரசுக்கு எதிராக நேற்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெருசலமில் உள்ள இஸ்ரேலிய பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றி பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் ஒன்று திரண்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலக கோரி இந்த மாபெரும் போராட்டத்தை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலியர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து 6 மாதங்களாகியும், பிணைக் கைதிகளை இஸ்ரேல் இராணுவம் விடுவிக்காததால் கடும் கோபமடைந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒரே தீர்வு போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்தவும், விரைவில் பொதுத் தேர்தலை நடத்தவும் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருவதுடன், பிரதமர் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து அங்கு வசிப்பவர்களை பணயக்கைதிகளாக பிடிக்கும் அளவுக்கு பாதுகாப்பு நிலை பலவீனமடைந்துள்ளதாகவும், காஸா பகுதியில் நிராயுதபாணியான பலஸ்தீனியர்களை கொன்று குவித்துள்ள சர்வதேச அதிருப்தி அந்நாட்டு மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...