follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2வாயால் கூறுவதில் பயனில்லை - உடனடியாக சுற்றறிக்கையை விடுங்கள்.

வாயால் கூறுவதில் பயனில்லை – உடனடியாக சுற்றறிக்கையை விடுங்கள்.

Published on

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், இதற்கான சட்ட அதிகாரங்களை வழங்கும் சுற்றறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்காக வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மாத்திரம் அறிவிக்காமல், புதிய சுற்றறிக்கை மூலம் பிரதேச செயலாளர்களுக்கு சட்டரீதியாக அறிவிப்பை விடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் வாய்மொழியாக அறிவுரைகளை வழங்குவது போதுமானதாக அமையாது. அதிகரிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றறிக்கை மூலமே செயல்படுத்துகின்றனர். எனவே இந்த சுற்றறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...