follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

Published on

கொழும்பின் பல பகுதிகளில் இன்று(29) காலை 9 மணி முதல் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் மொரட்டுவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மின்சக்தியூடாக முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக அம்பத்தலே குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பிற்கான மின் விநியோகம் தடைப்படுகின்றமை மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...