follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2முச்சக்கர வண்டிகளுக்கான புதிய செயலி விரைவில்

முச்சக்கர வண்டிகளுக்கான புதிய செயலி விரைவில்

Published on

இன்று நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், தொழில்முறை ஓட்டுநர்களாகிய நீங்கள் பல சங்கங்களை இணைத்து புதிய போக்குவரத்து சங்கத்தை உருவாக்கியுள்ளீர்கள்.

நாம் ஒரு பொருளாதாரக் கொள்கையின் கீழ் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது அவசியம். அன்று இந்த நாட்டில் வரிசை யுகம் காணப்பட்டது.

கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் தொழில்சார் முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (18) நடைபெற்ற சந்திப்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், 08 இலட்சத்திற்கும் அதிகமானோர் முச்சக்கரவண்டித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை காரணமாக கடந்த காலங்களில் பாரிய நெருக்கடிகளை நீங்கள் எதிர்கொண்டீர்கள். முச்சக்கர வண்டிகள் தொழில் ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் நம் நாட்டிற்கு வருகை தருகின்றனர். நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் பெரும் சேவை செய்து வருகின்றனர். அடுத்த சில நாட்களில் முச்சக்கரவண்டிகளுக்கான புதிய தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் எனவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...