follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

Published on

ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகள் வாக்களிப்பதற்கு வசதிகளை செய்துகொடுக்கும் செயன்முறைகளை வெளியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பிற்கு உயர் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகளுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சிறைக்கைதியான சுதேஷ நந்திமால் டி சில்வா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே உச்ச நீதிமன்றத்தினால் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிக்கு இந்த உத்தரவை வழங்கியது.

இதற்கமைய மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி மன்றில் விளக்கமளிக்க வேண்டுமென குறிப்பிட்டு அழைப்பாணை விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக்...