follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

Published on

ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகள் வாக்களிப்பதற்கு வசதிகளை செய்துகொடுக்கும் செயன்முறைகளை வெளியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பிற்கு உயர் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகளுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சிறைக்கைதியான சுதேஷ நந்திமால் டி சில்வா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே உச்ச நீதிமன்றத்தினால் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிக்கு இந்த உத்தரவை வழங்கியது.

இதற்கமைய மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி மன்றில் விளக்கமளிக்க வேண்டுமென குறிப்பிட்டு அழைப்பாணை விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...