follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுபாண் ஒன்றினை நூறு ரூபாய்க்கு விற்கலாம்..

பாண் ஒன்றினை நூறு ரூபாய்க்கு விற்கலாம்..

Published on

பாண் ஒன்றின் விலை 130 ரூபாவிற்கு விற்பனை செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

450 கிராம் பாண் ஒன்றின்130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் அதிகார சபை அண்மையில் அறிவித்திருந்தது.

தற்போது பாண் நியாயமான விலைக்கு விற்கப்படுகிறதா என நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனால், பேக்கரி உரிமையாளர்கள் தேவையான எடையில் பாணை உற்பத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தலைவர் தெரிவித்தார்.

கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்தால் பாணை 100 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது பேக்கரி உரிமையாளர்களின் பின்னால் தாவாமல் கோதுமை மாவின் விலையை குறைப்பதே ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் கோதுமை மாவின் விலையை கணிசமான அளவு குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில்...

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...