follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2கூடிய விரைவில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு 20 எம்.பிக்களுக்கு அறிவுறுத்தல்

கூடிய விரைவில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு 20 எம்.பிக்களுக்கு அறிவுறுத்தல்

Published on

பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொத்து விபரங்களை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

இதனை பின்பற்றாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் புதிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...