follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பஸ் சேவை இடைநிறுத்தம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பஸ் சேவை இடைநிறுத்தம்

Published on

4 நாட்கள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்ட கட்டுநாயக்க விமான நிலைய புதிய சொகுசு பஸ் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு இடையில் போக்குவரத்து சேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பஸ் சேவை நேற்று(19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்கவால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த புதிய சொகுசு பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டநிலையில், கடந்த 16 ஆம் திகதி விமான நிலையம் – கோட்டை பஸ் ஊழியர் சங்கம் புதிய சொகுசு பஸ் சேவைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

அத்தோடு இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்தது.

இந்நிலையில், முறைப்பாடுகளை பரிசீலித்து விமான நிலைய புதிய சொகுசு பஸ் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...