follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2சமுர்த்தி உத்தியோகத்தர்களது நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

சமுர்த்தி உத்தியோகத்தர்களது நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

Published on

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நீண்டகாலமாக நிலவும் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஸ்தாபனத்தின் போது புதிய சேவை அதிகாரிகளாக உள்வாங்கப்பட்ட 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாதிக்கும் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆரம்பகால சேவை அதிகாரிகளாக கருதப்படுவதற்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்குவதற்கான தொழில்சார் தீர்வு வழங்கப்பட்டதாகவும், இதனால் அவர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காண நிதியமைச்சின் இணக்கம் காணப்பட்டமை சாதகமான நிலை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...