follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2ஓய்வூதியம் பெறுவோருக்கு 12,500 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு

ஓய்வூதியம் பெறுவோருக்கு 12,500 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு

Published on

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 2025 ஜனவரி முதல், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தலா ரூ.12,500 வழங்குவதற்கும், 2020ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாத ஊதிய உயர்வை வழங்கவும், அதற்கேற்ப அவர்களின் ஓய்வூதியத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள நிதி சாத்தியத்தின் அடிப்படையில் படிப்படியாக பொருத்தமாக பலன்களை வழங்க 2025 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச சேவையின் வினைத்திறனையும் செயற்திறனையும் விருத்தி செய்து மக்களுக்கு சிறந்த அரச சேவையை வழங்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு அரச சேவையில் விஞ்ஞான ரீதியில் வேலை ஆய்வு (Work Study) நடத்தப்பட்டு உரிய வகையில் அரச சேவையை மறுசீரமைப்பதற்கான விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...