follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுமது விற்பனை தடை செய்யப்பட வேண்டும்

மது விற்பனை தடை செய்யப்பட வேண்டும்

Published on

வெசாக் பண்டிகையின் போது மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால், கிறிஸ்மஸ் காலத்திலும் மதுபான விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

மதம் என்பது விருந்து மற்றும் குடித்து விட்டு வாழ்க்கையை வீணாக்குவது அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்..

கனேமுல்ல பிரதேசத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு இதனை தெரிவித்துள்ளார்.

சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பத்திரிகைகளில் பார்த்ததாகக் கூறிய கர்தினால், கிறிஸ்மஸ் நாளில் மதுபானம் வாழ்க்கையை அழிக்க அனுமதிப்பது செழுமையின் பார்வையா என்று கேள்வி எழுப்பினார்.

ஏப்ரல் 21 நடந்த பேரழிவுக்கான எந்த ஒரு செயலூக்கத்தையும் நாம் இன்னும் காணவில்லை.

ஈஸ்டர் ஆணைக்குழுவின் அறிக்கையில் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை ஒருவர் கூட விசாரிக்கப்படவில்லை.

நாம் அரசியல் சக்திகளின் அல்லது தலைவர்களின் கைக்கூலிகளாக இருக்கக் கூடாது. நாங்கள் கற்பிக்கும் தத்துவம் இன்னும் உயர்ந்தது என கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...

நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை நீர்மாணிக்க அவதானம்

காட்டு யானைகளுக்கு நோய் ஏற்படும் போது அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முறைமையொன்று இல்லை என்றும், அதனால் நடமாடும் மற்றும்...