follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று

Published on

சர்ச்சைக்குரிய சூழலை எதிர்கொண்டுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது.

அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

எனினும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.

மூன்று விடயங்கள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் பரிசீலனை உடனடியாக தொடங்கப்பட உள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், பரீட்சைக்கு முன்னர் 03 கேள்விகள் மாத்திரமே வெளிவந்திருந்தன என்பது அந்த பரீட்சை குழுக்களின் இறுதித் தீர்மானமாகும்.

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆனால் பெற்றோர்கள் குழு ஒன்று, செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் பல சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் நடத்தியது, முழுமையான வினாத்தாள் வெளியிடப்பட்டதாகக் கூறியது.

இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதையடுத்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சை விசாரணைகள் முடியும் வரை இடைநிறுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக்...