follow the truth

follow the truth

June, 24, 2025
HomeTOP130 வருடங்களுக்கு பின்னர் பலாலி - அச்சுவேலி பிரதான வீதி திறப்பு

30 வருடங்களுக்கு பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி திறப்பு

Published on

வடமாகாணத்தின் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது.

முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டதுடன், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை.
இந்த வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஆளுநர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகமும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்படி, இந்த வீதியை திறப்பது தொடர்பிலுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்ததோடு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலையீட்டின் பேரில் பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய மாணவர்களிடம் தேவையற்ற விதத்தில் பணம் அறவீடு?

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய பத்து மாணவர்களிடமிருந்து நிர்வாகம் தேவையற்ற விதத்தில்...

துன்புறுத்தல், வன்முறையைத் தடுக்க பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த...

பொரளையில் துப்பாக்கிச்சூடு

பொரளை - வனாத்த பகுதியில் இன்று (24) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த...