follow the truth

follow the truth

June, 28, 2025
HomeTOP2நிலுவைத்தொகை செலுத்தத் தவறினால் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த தீர்மானம்

நிலுவைத்தொகை செலுத்தத் தவறினால் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த தீர்மானம்

Published on

நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் சஞ்சய் மஹவத்த உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று அழைக்கப்பட்ட போதே மதுவரி ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்த ஐந்து நிறுவனங்களும் செலுத்தாத வரிப்பணத்தின் பெறுமதி ஆறு பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக வழக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவில், உரிய வரிப்பணத்தை வசூலிக்குமாறு மதுவரி ஆணையர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கவும், வரி செலுத்துவதை புறக்கணிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

படகு கவிழ்ந்து விபத்தில் 6 மீனவர்கள் மாயம் – மீட்கும் பணி தீவிரம்

காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 6 கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை, பெல்...

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய சிறுவன் மருத்துவமனையில்...

இஸ்ரேலில் பணிபுரிந்து நாடு திரும்பியோருக்கான அறிவித்தல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry...