மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry visa) இந்நாட்டிற்கு வந்தவர்களின் மறு நுழைவு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை 2025.07.31 வரை நீட்டிக்க அந்நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை (PIBA) முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், இஸ்ரேலுக்கான சர்வதேச விமானங்கள் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதால், மறு நுழைவு வீசாவில் இந்நாட்டிற்கு வந்தவர்கள், மறு நுழைவு வீசா காலாவதியான பின்பும், 2025.07.31 வரையிலான நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில், இஸ்ரேலில் வேலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.