follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2"நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் – தனிநபர்களின் லேபல்கள் அல்ல.."

“நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் – தனிநபர்களின் லேபல்கள் அல்ல..”

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சரியான நபர்களை சரியான அமைச்சுகளுக்கு நியமித்துள்ளார் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“.. ஒரு நபரின் தகுதிகள், திறமைகள் மற்றும் அரசியல் அறிவு என்பனவே ஒரு அமைச்சை வழிநடத்துவதற்கான முதன்மை நிபந்தனை.. தவிர அவரது பாலினம், இனம் அல்லது மதம் அல்ல என்று தேசிய மக்கள் சக்தி கருதுகிறது

மற்றவர்களை விட அவர்களின் திறன்கள் மற்றும் பங்களிப்புகள் குறித்து அதிக நுண்ணறிவு கொண்ட ஒருவராக அவர் காணப்படுகின்றார்.

மதத்தின் அடிப்படையில் மட்டுமே அமைச்சரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தேவையற்ற பிளவுகளை தூண்டிவிட்டு நாம் முன்னேற வேண்டிய ஒற்றுமையையே குலைத்துவிடும் அபாயம் உள்ளது.

மத, இன வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பை நாங்கள் நம்பியதன் காரணமாகவே நாங்கள் NPP யை தெரிவு செய்தோம்.

குறிப்பிட்ட அமைச்சுக்களை யார் வகிக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம் என்ற பிரிவினையான விவாதங்களால் திசைதிருப்பப்படாமல் முடிவுகளை வழங்குவதற்கான இடத்தை இந்த அரசாங்கத்திற்கு வழங்குவதன் மூலம் அந்த நம்பிக்கையை மதிப்போம்.

நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் – தனிநபர்களின் லேபல்கள் அல்ல..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...