follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉலகம்ஹெலிகொப்டர் விபத்து : குரூப் கேப்டன் வருண் சிங்கும் உயிரிழப்பு

ஹெலிகொப்டர் விபத்து : குரூப் கேப்டன் வருண் சிங்கும் உயிரிழப்பு

Published on

அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தகவலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் குன்னூர் அருகே கடந்த கடந்த 8ம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டரில் இருந்த குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து ஹெலிகொப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...