follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுதேங்காய் விலை உயர்வு - சுமார் 80 சதவீதத்தால் குறைந்த சிதறு தேங்காய் வழிபாடு

தேங்காய் விலை உயர்வு – சுமார் 80 சதவீதத்தால் குறைந்த சிதறு தேங்காய் வழிபாடு

Published on

நாட்டில் தேங்காயின் விலை உயர்வடைந்ததையடுத்து கதிர்காமம் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது, சுமார் 80 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது தேங்காய்களின் விலை உயர்வைக் கருத்திற் கொண்டு பக்தர்கள் சிதறு தேங்காய் உடைப்பதைத் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேங்காய் தட்டுப்பாடு மற்றும் தேங்காயின் விலை உயர்வால் கதிர்காமம், செல்ல கதிர்காமம், போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இனிப்பு வகைகளை உற்பத்தி செய்யும் வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கதிர்காம யாத்திரிகர்கள் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது, வழக்கமாக உள்ள நிலையில் தேங்காய்களின் அதிக விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக தேங்காய் உடைத்து வழிபடுவது, 80 சதவீதம் குறைந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லக்ஷ்மன் யாப்பா உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அரசாங்கத்திற்கு ரூ.1.7 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எஃப்.யூ. வுட்லர் நியமனம்

இலங்கை பொலிஸின் புதிய ஊடகப் பிரிவின் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர்  எஃப்.யூ. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னைய ஊடகப் பிரதிநிதியான...

மின்சார திருத்த சட்டமூலம் – பிரதி சபாநாயகர் வௌியிட்ட தகவல்

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். பல பிரிவுகள் அரசியலமைப்பை...