லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் GALLE MARVELS அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை ஒருவர் ஆட்ட நிர்ணயம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவரிடம் பணத்திற்காக போட்டிகளை ஏமாற்றுமாறு குறித்த சந்தேக நபர் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த நாட்டில் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.
அதன்படி நேற்று அதே பிரிவைச் சேர்ந்த குழுவினர் பல்லேகல பகுதிக்கு சென்றுள்ளனர்.
குறித்த இந்திய பிரஜை கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.