follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP1HMPV வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை

HMPV வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை

Published on

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 வருடங்களாக உலகளாவிய ரீதியில் உள்ள பல நாடுகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த வைரஸ் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதத்திலும் கண்டி மாவட்டத்திலும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

குளிர் காலத்திலேயே இந்த வைரஸ் தொற்று அதிகமாகப் பரவுகிறது.

இதன் காரணமாக, இந்த வைரஸ் குறித்து இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

சட்டவிரோதமாக குடியேறியுவர்களுக்கு புதிய இடம்

களனிவெளி ரயில் மார்க்க பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வேறு இடமொன்றில் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு இலவச பாதணிகளுக்கான 3,000 ரூபா வவுச்சர்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும்...