follow the truth

follow the truth

June, 21, 2025
Homeஉள்நாடுமின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீதும், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துகின்றனர்

மின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீதும், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துகின்றனர்

Published on

நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையான பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.

சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவையுள்ள காலங்களை நிர்வகிக்கத் தவறிய மோசமான நிர்வாகமும்தான் மின்தடைக்கான உண்மையான காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்தடை தொடர்பிலான உண்மை நிலையை இது போன்ற தவறான தகவல்கள்மூலம் மறைக்க முடியாது என்றும், மின் துறையில் சீர்திருத்தங்கள்மூலம் மட்டுமே அதை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தகைய அமைப்பில் மாற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...