follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1"பிரஜாசக்தி" தேசிய வேலைத்திட்டம் - ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆரம்பம்

“பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆரம்பம்

Published on

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜூலை 04 ஆம் திகதி அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கு அவசியமான திட்டமிடல் மற்றும் ஏற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் பிரஜாசக்தி தேசிய செயற்படுத்தல் குழுவின் முதல் கலந்துரையாடல், அந்தக் குழுவின் தலைவர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பிரஜாசக்தி செயற்படுத்தல் குழுவில் அமைச்சுகளின் செயலாளர்கள் 09 பேர் மற்றும் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் அங்கம் வகிக்கின்றனர். குழுவின் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) செயல்படுவார். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, இத்திட்டம் சமூக வலுவூட்டல் திட்டமாக பல்முனை அணுகுமுறையுடன் செயல்படுத்தப்படுகிறது.

அரசாங்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தேசிய அளவிலான திட்டங்கள் 03 இல், பொருளாதார அபிவிருத்தியின் நன்மைகள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிடையேயும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதி செய்தல், இலக்குமயப்பட்ட அபிவிருத்தியின் ஊடாக கிராமப்புறங்களை முழுமையான அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதன்படி, நாட்டில் செயல்படுத்தப்பட்ட மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சமூக வலுவூட்டல் திட்டங்களை வேறுபட்ட அணுகுமுறை மூலம் செயல்படுத்தும் நோக்கில் “பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் அனைத்து மட்டங்களிலும் நாட்டின் அபிவிருத்தி தேவைகளை அடையாளம் காணுதல், கொள்கை உருவாக்கம், செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு உட்பட முழு செயல்முறைக்கும் பங்களிக்கும் வகையில் புதிய கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகம், திறன் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பிரஜாசக்தி சபைகளை நிறுவுதல் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தற்போது, இந்நாட்டின் மொத்த சனத்தொகையில் ஒவ்வொரு 06 பேரில் ஒருவர், பல பரிமாண வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 95.3% பேர் கிராமப்புறங்களிலும் தோட்டப் பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

இந்த நிலை தொடர்வது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்திச் செயல்முறையை பாதிப்பதோடு, சமூக வலுவூட்டல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து, முறையான சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்படுவது இதன் கீழ் செயற்படுத்தப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய மாணவர்களிடம் தேவையற்ற விதத்தில் பணம் அறவீடு?

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய பத்து மாணவர்களிடமிருந்து நிர்வாகம் தேவையற்ற விதத்தில்...

துன்புறுத்தல், வன்முறையைத் தடுக்க பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த...

பொரளையில் துப்பாக்கிச்சூடு

பொரளை - வனாத்த பகுதியில் இன்று (24) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த...