இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின் படி, நேற்று (22) நடைபெற்ற நாணயக் கொள்கை சபை கூட்டத்தில், தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒருநாள் கொள்கை வட்டி விகிதம் (OPR) 7.75 சதவீதமாக இயல்பாகவே நீடிக்கும்.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளை பரிசீலித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.