ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகஸ்ட்டில் பதவி விலகவிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி படுதோல்வி அடைந்தது.
இதையடுத்து திரு இஷிபாவின் பதவி ஆட்டம் கண்டுள்ளது.
மேலவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்காக அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
ஆளும் கூட்டணியின் எதிர்ப்பையும் மீறி ஆட்சியில் நீடிக்க சபதம் செய்துள்ள இஷிபாவுக்கு அவரது லிபரல் ஜனநாயகக் கட்சியிலேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது.