follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுஅதிகளவில் தொற்றாளர்கள் பதிவானால் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலாம்

அதிகளவில் தொற்றாளர்கள் பதிவானால் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலாம்

Published on

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுகின்றமையினால் எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை பெற வேண்டிய நிலை காணப்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் கொவிட் தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும், சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமெனவும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீண்ட வாரஇறுதி நாட்களில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட நபர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சுகாதாரத் துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...