அதிபர், ஆசிரியர் வேதன பிரச்சினையை ஆராய குழு நியமனம்

760

ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையிடுவதற்காக ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவை உப குழுவில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here