follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்ஹிஜாப் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஹிஜாப் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Published on

ஹிஜாப் விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில், ஹிஜாப் அணிந்து வர மாணவிகளுக்கு தடைவிதித்ததை தொடர்ந்து  மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், மூத்த வழக்கறிஞரான கபில் சிபல், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்லெறி சம்பவங்கள் நடைபெறுகின்றன. கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் உள்ள ஹிஜாப் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க  உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...