follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுமகிந்தானந்தவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவுள்ளதாக அறிவிப்பு

மகிந்தானந்தவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவுள்ளதாக அறிவிப்பு

Published on

சதொச நிறுவனத்தின் ஊடாக விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்து, அதனை விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளித்தமை தொடர்பில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவுள்ளதாக கையூட்டல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, கையூட்டல் ஆணைக்குழு இந்த விடயத்தை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

சதொச நிறுவனத்தின் ஊடாக விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்து, அதனை விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளித்தமை ஊடாக அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...

புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சராக, கெரி ஆனந்தசங்கரி,...