follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுமத்திய வங்கி ஆளுநர் - ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சந்திப்பு

மத்திய வங்கி ஆளுநர் – ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சந்திப்பு

Published on

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டிசில்வா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது குறுகிய கால பணப்புழக்க பிரச்சினை என மத்திய வங்கி கருதினாலும், அது தவறானது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பொருளாதார நெருக்கடியானது நாட்டை வங்குரோத்து நிலைக்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும், இலங்கையின் கடனை மறுசீரமைத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...