follow the truth

follow the truth

May, 10, 2025
Homeவணிகம்மசகு எண்ணெய் விலை 30 சதவீதத்தினால் அதிகாிப்பு

மசகு எண்ணெய் விலை 30 சதவீதத்தினால் அதிகாிப்பு

Published on

யுக்ரைன் மீதான ரஷ்யாவின்  தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109 டொலர் 30 சதமாகவும், அமெரிக்க WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 டொலர் 40 சதமாகவும் உள்ளது.

இதேவேளை, மேற்கத்தேய நாடுகள் எரிபொருள் இறக்குமதியை இடைநிறுத்தியதன் காரணமாக ரஷ்யாவின் மசகு எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெப்ரவரி 24 ஆம் திகதியிலிருந்து மசகு எண்ணெய் விலை 30 சதவீதம் அதிகரித்ததுடன், உச்சபட்சமாக அதன் விலை 130 டொலர்கள் வரை  உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...