follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

ரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

Published on

ரயில் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது ரயில் கட்டணங்கள் 58 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி புகையிரத போக்குவரத்தின் போது மூன்றாம் வகுப்புக்காக முதல் பத்து கிலோமீட்டருக்கு ஒரு ரூபா முப்பது சதமாக காணப்பட்ட ரயில் கட்டணம் இரண்டு ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டணம் அதிகரிக்கப்படும் போது ரயில் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான்கு தடவைகள் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போதும் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து இவ்வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் புகையிரத கட்டண திருத்தத்திற்கான அனுமதியைப் பெற்று அதன் பின்னரே கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் , எவ்வாறிருப்பினும் பாரியளவில் கட்டணங்களை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...