follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுநாட்டை மாத்திரம் முடக்குவதால் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது

நாட்டை மாத்திரம் முடக்குவதால் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது

Published on

மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நாட்டை மாத்திரம் முடக்குவதால் கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணா்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இது வாழ்க்கையுடனான போராட்டமாகும். எனவே அனைவரும் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் இருப்பார்களாயின் அருகிலுள்ள தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணா்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார்.

தற்போது பயன்படுத்தப்படுகின்ற சகல தடுப்பூசிகளும் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற உதவும் என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், டெல்டா திரிபானது மிகவும் வேகமாக பரவக் கூடியது எனவும் சகலரும் தாமாகவே தம்மை பாதுகாத்துக் கொள்வார்களாயின் இவ்வாறு வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் இருக்காது எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணா்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...