follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுநாட்டில் நிலவும் நெருக்கடி விரைவில் தீர்க்கப்படும் - பிரதமர்

நாட்டில் நிலவும் நெருக்கடி விரைவில் தீர்க்கப்படும் – பிரதமர்

Published on

இலங்கை பொருளாதாரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உணவு, மருந்து மற்றும் எரிபொருளுக்கு நாட்டில் நிலவும் நெருக்கடி விரைவில் தீர்க்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

பிபிசி செய்தி சேவைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு மூன்று வேளை உணவை பெறுவதற்கு தாம் உறுதி செய்வதாகவும், பட்டினி பிரச்சினை இலங்கையில் ஏற்படாத வகையில் தாம் உரிய நடவடிக்கையினை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிதி உதவிக்காக நட்பு நாடுகளிடம் தாம் கலந்துரையாடிகொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய நெருக்கடி நிலைமை “மோசமடைவதற்கு முன் சரியாகிவிடும்” என கூறியுள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மத்திய கலாசார நிதியத்தின் நடவடிக்கைகளை பரிசீலிக்க மூவரடங்கிய குழு நியமனம்

2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் நிதியுதவிகள்...

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும்

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும்...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபா கொடுப்பனவு

அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன்,...