இலங்கை பொருளாதாரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உணவு, மருந்து மற்றும் எரிபொருளுக்கு நாட்டில் நிலவும் நெருக்கடி விரைவில் தீர்க்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
பிபிசி செய்தி சேவைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு மூன்று வேளை உணவை பெறுவதற்கு தாம் உறுதி செய்வதாகவும், பட்டினி பிரச்சினை இலங்கையில் ஏற்படாத வகையில் தாம் உரிய நடவடிக்கையினை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிதி உதவிக்காக நட்பு நாடுகளிடம் தாம் கலந்துரையாடிகொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போதைய நெருக்கடி நிலைமை “மோசமடைவதற்கு முன் சரியாகிவிடும்” என கூறியுள்ளார்.