follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஅவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Published on

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

மேலும், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றமில்லை எனவும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமையை தான் உறுதிப்படுத்துவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் அறிவித்துள்ளார்.

இன்று இடம்பெறும் அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை அதிகாரிகளினால் கடந்த வாரம் படகொன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் இரண்டாவது படகை தடுத்து நிறுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...