எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மண்ணெண்ணெய் விநியோகத்தில் இடம்பெறும் மோசடியை குறைப்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.