கொத்து ரொட்டி,பீட்சா கேட்கும் கர்ப்பிணிப் பெண்கள் – உபுல் மகேந்திர ராஜபக்ஷ

945

இந்த காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கொத்து ரொட்டி ,கோலா,பீட்சா கேட்க்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போசாக்கு தொடர்பான விவாதம் இரண்டு நாட்களாக நாடளுமன்றில் நடைபெற்று வருகிறது.உண்மையில் இது முக்கியமானது.நாடு தற்போது உள்ள நிலையில் அடிப்படை விடயத்தை கூட இப்போது நாம் தலைப்பாக கதைக்க வேண்டி உள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

அக்கால கர்ப்பிணி பெண்கள் பலாக்காய் ,கீரை போன்று உணவுகளை விரும்பி உண்டார்கள்.இதனால் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்தது.

இப்போது உள்ளவர்கள் கொத்து ரொட்டி ,கோலா,பீட்சா கேட்க்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here