follow the truth

follow the truth

May, 24, 2025
Homeஉலகம்ராணியின் இறப்பு சான்றிதழ் வெளியானது!

ராணியின் இறப்பு சான்றிதழ் வெளியானது!

Published on

பிரித்தானியாவை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமைக்குரிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறப்பு சான்றிதழ் வெளியாகியுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்ததாக அவரது இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுளளது.

ஸ்கொட்லாந்தின் நேஷனல் ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஆவணம், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், பிற்பகல் 3:10 மணிக்கு இறந்ததாகக் கூறுகிறது.

ராணி, பிரித்தானிய நேரம் (காலை 10:10 மணி) செப்டம்பர் 8ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பாலேட்டரில் உள்ள பால்மோரல் கோட்டையில் உயிரிழந்தார்.

இறப்புக்கான காரணம் முதுமை என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் ராணியின் மகள் இளவரசி அன்னே கையெழுத்திட்டுள்ளார்.

அதேவேளை 70 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...