follow the truth

follow the truth

May, 24, 2025
Homeஉலகம்இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து -11 பேர் பலி!

இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து -11 பேர் பலி!

Published on

இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேரூந்துப் பயணிகள் பலியாகினர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பயணிகள் பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்களும் மோதிய நிலையில் பேரூந்து தீப்பற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேரூந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமானவர்களில் ஒரு அகவை குழந்தையும் அடங்கியுள்ளது.

சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.

இதில் சிலரின் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...