எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

832

பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி  பகுதியில் உள்ள காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து கடமையிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை
தாக்கியதாக குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று காலை பம்பலப்பிட்டி காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here