follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து

சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து

Published on

நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.

சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறவிருந்தது.

இந்த மாநாட்டில் பங்கேற்க தலிபான் பிரதிநிதிகளையும், அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் யோசனை முன்வைத்துள்ளது.

குறித்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த இணக்கமில்லாத காரணத்தினால் சார்க் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது என்று அமைப்பின் பல இராஜதந்திர வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

சார்க் அமைப்பில், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான் முதலான 8 நாடுகள் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்ட நேபாள வெளியுறவு அமைச்சகம், அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாததால் சந்திப்பு இரத்து செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியது.

 

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...