follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉலகம்சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து

சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து

Published on

நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.

சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறவிருந்தது.

இந்த மாநாட்டில் பங்கேற்க தலிபான் பிரதிநிதிகளையும், அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் யோசனை முன்வைத்துள்ளது.

குறித்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த இணக்கமில்லாத காரணத்தினால் சார்க் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது என்று அமைப்பின் பல இராஜதந்திர வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

சார்க் அமைப்பில், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான் முதலான 8 நாடுகள் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்ட நேபாள வெளியுறவு அமைச்சகம், அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாததால் சந்திப்பு இரத்து செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவூதி அரேபியாவில் பிரதமர் மோடி – 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு

சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசர் முகமது பின்...

முதல் முறையாக சீனாவில் தங்க ATM அறிமுகம்

தற்போது தொடர்ந்து தங்கம் விலை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக சீனாவில் தங்க...

மறைந்த பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை சனிக்கிழமை

நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த...