follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து

சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து

Published on

நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.

சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறவிருந்தது.

இந்த மாநாட்டில் பங்கேற்க தலிபான் பிரதிநிதிகளையும், அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் யோசனை முன்வைத்துள்ளது.

குறித்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த இணக்கமில்லாத காரணத்தினால் சார்க் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது என்று அமைப்பின் பல இராஜதந்திர வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

சார்க் அமைப்பில், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான் முதலான 8 நாடுகள் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்ட நேபாள வெளியுறவு அமைச்சகம், அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாததால் சந்திப்பு இரத்து செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...