நன்னடத்தை உடைய கைதிகளுக்கு ஒரு வார கால விடுமுறை

771

சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நன் நடத்தைகளுடன் இருக்கும் கைதிகளுக்கு ஒரு வார கால விடுமுறையை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்யுமாறு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கூரையின் மீதேறி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைதிகளின் கோரிக்கை தொடர்பில் கேட்டறிவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கைதிகளுடன் கலந்துரையாடிதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சிறைச்சாலையில் சிறந்த நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர், ஒருவார காலத்துக்கு அவர்களது குடும்பத்தாருடன் இருந்து வருவதற்கு அனுப்ப முடியும். அந்த சந்தர்ப்பத்தை உடனடியாக வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கின்றது. சிறந்த நன்னடத்தை செயலில் இருக்கவேண்டும். சிறந்த நன்நடத்தையும் இருப்பதை செயற்பாட்டில் ஒப்புவிக்கவேண்டும். அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here