follow the truth

follow the truth

July, 19, 2025
Homeஉள்நாடுவீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு 303 மில்லியன் ரூபா வருமானம்

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு 303 மில்லியன் ரூபா வருமானம்

Published on

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, கடந்த நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய கடன்களை மீளப்பெற்று, சொத்துக்கள் மூலம் 303 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த மாதமும் 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை எதிர்பார்ப்பதுடன், அடுத்த வருடமும் இதேபோன்று வருமான நிலையைப் பேணுவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.

ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவினங்களுக்காக சுமார் 150 மில்லியன் ரூபாவை அதிகார சபை செலவிடுகிறது.

எனினும், தற்போதைய வருமானத்தின்படி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திறைசேரிக்கு சுமையின்றி இயங்கக்கூடியதாக உள்ளதென அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...