follow the truth

follow the truth

July, 18, 2025
Homeஉள்நாடுமைத்திரியின் மனு விசாரணை ஒத்திவைப்பு

மைத்திரியின் மனு விசாரணை ஒத்திவைப்பு

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் சந்தேகநபராக பெயரிட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றினால் வௌியிடப்பட்டுள்ள பிடியாணையை வலுவிழக்கச் செய்யக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு விசாரணைகளை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டின் பேரில், இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி
17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையை அனுமதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு மீதான விசாரணையை பத்து வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலுக்கு ஆளான ஒருவர் தனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறைப்பாடு செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட முறைப்பாட்டில் உள்ள விடயங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என சுட்டிக்காட்டிய சிறிசேன, அந்த விடயங்களின் அடிப்படையில் சந்தேகநபராக நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் விடுத்த அழைப்பாணை சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தார்.

இதன்படி, தம்மை நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து விடுக்கப்பட்ட அழைப்பாணை செல்லுபடியாகாது என நீதிமன்றில் ஆணை பிறப்பிக்குமாறு கோரியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...