follow the truth

follow the truth

July, 18, 2025
Homeஉள்நாடுதேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்தியாவின் தொழிநுட்ப உதவியை பெற்றுக்கொள்ள  எதிர்பார்ப்பு

தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்தியாவின் தொழிநுட்ப உதவியை பெற்றுக்கொள்ள  எதிர்பார்ப்பு

Published on

தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்தியாவின் தொழிநுட்ப உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் சார்ந்திருப்பதை தவிர்த்து உள்ளுர் பால் உற்பத்தியை அதிகரிக்க உத்தேஷிக்கப்பட்டுள்ளது.

இதற்கென குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டத்தை தயாரிக்க இந்தியாவின் தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை கொண்ட குறித்த குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை, இந்தியாவின் அமுல் பால் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் திரவ பால் உற்பத்திக்கு தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமான் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

தேசிய பால் உற்பத்தியை இருமடங்காக அதிகரிப்பது தொடர்பிலும், இலக்கை அடைவதற்கான வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கையை நீண்டகால அடிப்படையில் பாலில் தன்னிறைவடையச்செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...