follow the truth

follow the truth

July, 18, 2025
Homeஉள்நாடுஇரட்டைக் குடியுரிமையுடைய உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து ஆராய்வேன் - சபாநாயகர்

இரட்டைக் குடியுரிமையுடைய உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து ஆராய்வேன் – சபாநாயகர்

Published on

இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்வைத்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில்,

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு நேற்று (05) சமர்ப்பித்தேன்.

நாடாளுமன்ற பிரதான செயலாளரினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜதந்திர கடவுசீட்டு விநியோகிக்குமாறு தெரிவித்து அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரித்தானிய பிரஜை என்பதால் அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்று வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சபாநாயகர் என்றவகையில் இந்த சம்பவம் தொடர்பில் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா என கேட்கின்றேன் என்றார்.

இதேவேளை எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவிக்கையில்,

21 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் இரட்டைக் குடியுரிமையை கொண்ட பெண் எம்.பியொருவர் சட்டத்திற்கு புறம்பான வகையில் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கின்றார். இதன்படி இந்த விடயத்தில் சபாநாயகர் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்றார்?

இதன்போது பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிவுறுத்துகின்றேன் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...