follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாடயானாவின் எதிர்பார்ப்பு பொசுங்கியதா?

டயானாவின் எதிர்பார்ப்பு பொசுங்கியதா?

Published on

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜாங்க கடவுச்சீட்டு வழங்கியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்தி பிரிவு தொடர்பு கொண்டு கேட்ட போது, சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத்தால் இன்று (20) இது தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் எனவும், எனவே அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது எனவும் ஓஷல ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தன்னை யாராலும் அசைக்க முடியாது என்றும் தான் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடவில்லை என்றும், நீதியினை நீதிமன்றம் வழங்கும் என்றும் அண்மைக்காலமாக டயனா கமகே பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்தும் தெரிவித்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...