follow the truth

follow the truth

May, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாடயானாவின் எதிர்பார்ப்பு பொசுங்கியதா?

டயானாவின் எதிர்பார்ப்பு பொசுங்கியதா?

Published on

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜாங்க கடவுச்சீட்டு வழங்கியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்தி பிரிவு தொடர்பு கொண்டு கேட்ட போது, சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத்தால் இன்று (20) இது தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் எனவும், எனவே அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது எனவும் ஓஷல ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தன்னை யாராலும் அசைக்க முடியாது என்றும் தான் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடவில்லை என்றும், நீதியினை நீதிமன்றம் வழங்கும் என்றும் அண்மைக்காலமாக டயனா கமகே பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்தும் தெரிவித்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...