follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடு4 இலட்சம் வரையிலான சுற்றுலா பயணிகளை அழைத்து வர விசேட வேலைத்திட்டம்

4 இலட்சம் வரையிலான சுற்றுலா பயணிகளை அழைத்து வர விசேட வேலைத்திட்டம்

Published on

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாதங்களாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் 2019 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட இரண்டு மாதங்களில் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையையேனும் இந்த வருடத்தில் எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, டிசம்பர் மாதம் ஆகும் போது 4 இலட்சம் வரையிலான சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

இதற்காக பல நாடுகளை இலக்காகக் கொண்டு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதுடன், இரண்டு தடுப்பூசிகளையும் பெறாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு நாட்டிற்கு வருகை தருவதற்கு ஒன்லைன் மூலம் விசா பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மீளவும் வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்ட புதிய வழிகாட்டல்களுக்கு அமைய இதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...