நேபாள விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்பு

425

நேபாளத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் கைப்பற்றி உள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கொக்பிட் வொய்ஸ் ரெக்கோர்டர் மற்றும் ஃபிளைட் டேட்டா ரெக்கோர்டர் ஆகிய இரண்டும், சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா நோக்கி சென்ற விமானம் பொக்காரா விமான நிலையத்தை நெருங்கியபோது அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றியது.

விமானத்தில் பயணித்த 72 பேரும் உயிரிழந்தனர். இதுவரை 69 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. விபத்து குறித்து விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here